புதுடில்லி: ரயில் பெட்டிகளில் தானியங்கி கதவுகளை பொருத்த ரயி்ல்வேத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஓடும் ரயில்களில் கொலை, கொள்ளை , கற்பழிப்பு, போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதனை தடுக்கும் விதமாக, பெருநகரங்களில் உள்ள மெட்ரோ ரயில்களில், தானியங்கி கதவுகள் உள்ளது போன்று , நெடுந்தூரம் செல்லும் ஏ.சி.பெட்டிகளில் தானியங்கி கதவுகள் பொருத்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. ரயில்வேயின் ஆராய்ச்சி, வடிவமைப்பு (ஆர்.டி.எஸ்.ஓ.) அமைப்பு இதற்கான வடிவமைப்பினை செய்ய திட்டமிட்டுள்ளது. ரயில்வே அமைச்சக அதிகாரி கூறுகையில், ரயில்களில் முதல்கட்டமாக 20 ஏ.சி., பெட்டிகளில் தானியங்கி கதவுகள் பொருத்த, பஞ்சாப் மாநிலம்,கபுர்தாலாவில் உள்ள ரயில்பெட்டி தொழிற்சாலையில் பணிகள் நடந்து வருகின்றன. பின்னர் ஏ.சி. அல்லாத பெட்டிகளிலும் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த தானியங்கி கதவுகளின் மொத்த கட்டுப்பாடும், ரயில்வே கார்டு மற்றும் டிரைவர் கேபினில் இருந்து செயல்படும் - news entry 149528.. ur views pls