வட இந்தியாவில் கடும் பனி: 70 ரெயில்கள் தாமதம்:
ஞாயிறு, டிசம்பர் 28,2014, 9:23 AM IST பதிவு செய்த நாள்: ஞாயிறு, டிசம்பர் 28,2014, 9:23 AM IST
புதுடெல்லி,
வட இந்தியா முழுவதும் கடுமையான பனி நிலவி வருகிறது. நேற்று மட்டும் கடும் பனிக்கு உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாபில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் சாலைகளில் வாகனங்கள் தேங்கியுள்ளன. 70-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அந்த...
more... ஆண்டின் குளிர்கால சீசனில் அதிகமான பனிமூட்டம், கடுங்குளிரை தலைநகர் புதுடெல்லி மற்றும் ஆக்ரா பதிவு செய்துள்ளது. 4.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு டெல்லியில் குளிர் நிலவி வருகிறது. ஆக்ராவில் 2.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் கடுங்குளிர் நிலவுகிறது. ஹரியானா மாநிலத்தில் 2 டிகிரி செல்சியஸூக்கும் குறைவாக வெப்பநிலை நிலவுவதால் ஒரே நாளில் 3 பேர் பலியாகியுள்ளனர். சிம்லாவில் -10 டிகிரி செல்சியஸூக்கும் குறைவாக வெப்பநிலை இருப்பதால் அங்கு வீடுகள், வாகனங்கள் மீது பனி படர்ந்துள்ளது.
கடும் பனி காரணமாக எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாததால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், சதாப்தி எக்ஸ்பிரஸ், ஹவுரா கல்கா மெயில் உள்பட 50-க்கும் மேற்பட்ட வட இந்திய ரெயில்கள் 11 மணிநேரத்திற்கும் மேலாக தாமதாக சென்றது. விமான சேவைகளும் கடுமையாக பாதிப்பு.