சென்னை, பிப்.10:
சென்னையில் முதலில் அறிவித்த மெட்ரோ ரயில் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால், 2வது பகுதியாக 3 வழித்தடங்களில் புதிய மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான �விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய� சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
சென்னையில், வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையும், சென்ட்ரலில் இருந்து புனித தோமையார்மலை வரையும் இரண்டு வழித்தடங்களில் 45 கி.மீ. நீளத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 2009ம் ஆண்டு முதல் நடந்து வரும் பணியில் 75 சதவீதம் முடிந்துள்ளது. 2016ம் ஆண்டு இறுதிக்குள் 100 சதவீத பணிகள் முடிவடையும். இதற்கிடையே, முதல்கட்டமாக கோயம்பேடு & ஆலந்தூர் இடையே 10 கி.மீ. தூரத்துக்கு விரைவில் மெட்ரோ ரயில் இயக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில்,...
more... முதல்கட்டமாக அறிவிக்கப்பட்ட இரண்டு வழித்தடங்களிலும் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், 2வது பகுதியாக சென்னையில் மூன்று வழித்தடங்களில் புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, மாதவரம், பெரம்பூர், அயனாவரம், புரசைவாக்கம், கேஎம்சி, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ஜெமினி, ராதாகிருஷ்ணன் சாலை, லஸ், கலங்கரை விளக்கம் வரை 17 கி.மீ. தூரத்துக்கு ஒரு வழித்தடத்திலும்,
கோயம்பேடு, சாலிகிராமம், வடபழனி, கோடம்பாக்கம், பனகல் பூங்கா, நந்தனம், லஸ், மந்தைவெளி, அடையாறு, பெசன்ட்நகர், திருவான்மியூர், கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம் வரை 27 கி.மீ. தூரத்துக்கு ஒரு வழித்தடத்திலும்,
மாதவரம், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர் மேற்கு, முகப்பேர், மதுரவாயல், வளசரவாக்கம், டிரேடு சென்டர், ஓடிஏ, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மேடவாக்கம், பெரும்பாக்கம் வரை 32 கி.மீ. தூரத்துக்கு ஒரு வழித்தடம் என மொத்தம் 3 வழித்தடங்களில் 2வது பகுதியாக புதிதாக மெட்ரோ ரயில் பாதை அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கண்ட 3 வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் பாதை அமைப்பது மற்றும் ரயில் நிலையம் அமைப்பது தொடர்பான, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிலையம் டெண்டர் கோரியுள்ளது. அடுத்த மாதம் 4ம் தேதி மாலை 3 மணிக்குள் டெண்டர் விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
அதில், எந்த சாலை வழியாக ரயில் பாதை, ரயில் நிலையம் அமைக்க வேண்டும், தேவையான நிலங்கள், ரயில் பாதை அமைக்கும்போது எந்தெந்த கட்டிடங்கள் பாதிக்கும், அதற்கான இழப்பீடு தொகை, இதில் அரசு நிலம், தனியார் நிலம் எவ்வளவு, போக்குவரத்து மாற்றம் செய்வது எப்படி, எந்த ரயில் நிலையம் சுரங்கப்பாதையில் இருக்கும், எத்தனை ரயில் இயக்க வேண்டும், எத்தனை நிமிடத்துக்கு ஒரு ரயில் என்பது உள்பட அனைத்து தகவலையும் டெண்டர் கோரும் நிறுவனம் 6 மாதத்தில் விரிவான திட்ட அறிக்கையாக தயார் செய்து அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
3
புதிய மெட்ரோ ரயில் பாதை
வழித்தடத்தில் அமைக்க முடிவு